loder

பந்தநல்லூர் எஸ். பாண்டியன்

  • Home
  • பந்தநல்லூர் எஸ். பாண்டியன்

உன் கலை நிலைக்கட்டும்
இப்புவியில்
நின் புகழ் ஒலிக்கட்டும்
உலகோர் செவியில்

பரதம் ஒரு தவம்
அது இறைவன்
வலம் வரும் ரதம் – நீ
தவம் செய்த
பரததர்சனா
பொற்சதங்கை அணியும்
உன் மாணவிகளின் பாதம் – அதன்
நாதம் படைக்கும்
ஐந்தாம் வேதம்
நவரசங்கள்
நடனத்திற்கு எடுக்கும்
ஆரத்தி
பாவங்கள் காட்டும்
நாட்டியத்தின் நேர்த்தி
இன்னும் ஓர் யுகம்
நிலைக்கட்டும் உன் கீர்த்தி
பரததர்சனா பல யுகங்கள் நிலைக்க
எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்

கலைமாமணி
பந்தநல்லூர் எஸ். பாண்டியன்.
தமிழ்நாடு,
இந்தியா.
18.6.2023.